May 1, 2026
Thisaigal NewsYouTube
அமைச்சர் சிவக்குமார் விடுப்பில் செல்ல வேண்டிய அவசியமில்லை
தற்போதைய செய்திகள்

அமைச்சர் சிவக்குமார் விடுப்பில் செல்ல வேண்டிய அவசியமில்லை

Share:

பிரதமர் அன்வார் திட்டவட்டம்

அந்நியத் தொழிலாளர்கள் தருவிப்பு தொடர்பில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மின் விசாரணைக்கு ஆளாகியுள்ள மனிதவள அமைச்சர் வி.சிவக்குமார், விடுப்பில் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

சிவக்குமார் சம்பந்தப்பட்ட விவகாரம், இன்னுமும் விசாரணைக் கட்டத்தில் உள்ளது. அவர் மீது எந்த குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை. இந்நிலையில் முன்கூட்டியே அவரை விடுப்பில் செல்ல வேண்டுமென்று கோருவது முறையல்ல என்று பிரதமர் தெளிவுப்படுத்தினார்.

சிவக்குமாரை எஸ்.பி.ஆர்.எம். விசாரணைக்கு அழைத்ததற்காக அவர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார் என்று பொருட்படாது. மாறாக, சில கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்காக எஸ்.பி.ஆர்.எம். மினால் அவர் அழைக்கப்பட்டிருக்கலாம் என்று பிரதமர் விளக்கினார்.

அந்நியத் தொழிலாளர்களைத் தருவிக்கும் நிறுவனம் சம்பந்தப்பட்ட 9 கோடியே 70 லட்சம் வெள்ளி லஞ்ச ஊழல் தொடர்பில் சிவக்குமாரின் இரு அதிகாரிகள் எஸ்.பி.ஆர்.எம். மினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சிவக்குமார் நேற்று எஸ்.பி.ஆர்.எம். விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி