பெத்தாலிங் ஜெயா,ஜன.11
கோலக்கிள்ளான் துறைமுக வாரியத்தின் ஓர் உறுப்பினராக தாம் நியமிக்கப்பட்டு இருப்பதை பிகேஆர் கட்சியின் மகளிர் பிரிவு உதவித்தவைரும் முன்னாள் அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமாரின் ஒரே மகளான சங்கீதா ஜெயக்குமார் இன்று ஒப்புக்கொண்டார்.
கோலக்கிள்ளான் துறைமுக வாரியத்தின் உறுப்பினராக தம்மை நியமித்ததற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்கிற்கும் தமது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக சங்கீதா ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.
GLC போன்ற அரசாங்க சார்பு நிறுவனங்களில் அரசியல் நியமனங்கள் கூடாது என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வலியுறுத்தி வந்த சங்கீதா ஜெயக்குமார், கோலக்கிள்ளான் துறைமுக வாரிய உறுப்பினர் பதவியை அவர் ஏற்றுக்கொண்டு இருப்பது மூலம் பல்வேறு தரப்பினரின் கடும் குறைகூறல்களுக்கு ஆளாகி வருகிறார்.








