Apr 14, 2026
Thisaigal NewsYouTube
ஸ்குவாஷ் மைதானம் அமைப்பதில் 1 மில்லியன் லஞ்ச ஊழல்: தலைமை செயலதிகாரி கைது
தற்போதைய செய்திகள்

ஸ்குவாஷ் மைதானம் அமைப்பதில் 1 மில்லியன் லஞ்ச ஊழல்: தலைமை செயலதிகாரி கைது

Share:

ஸ்குவாஷ் மைதானம் ஒன்றைக் கட்டுவதற்கான ஒப்பந்தம் தொடர்பாக லஞ்சம் பெற்றதாகச் சந்தேகத்தின் பேரில், கூட்டரசுப் பிரதேச சட்ட அமைப்பின் தலைமை செயலதிகாரி ஒருவரை, நேற்று இரவு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சுமார் 40 வயதுடைய அந்த சந்தேக நபர், ஸ்குவாஷ் மைதானம் கட்டுமான ஒப்பந்தம் தொடர்பாக லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.

அவர் நேற்று மாலை சுமார் 7.20 மணியளவில் புக்கிட் ஜலீல் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

கைது செய்யப்பட்ட அந்த அதிகாரி, ஒப்பந்ததாரரிடமிருந்து 1 லட்சம் ரிங்கிட் தொகையை லஞ்சமாக பெற்றதாக நம்பப்படுகிறது.

மேலும், அந்த சந்தேகநபர் முன்னதாக ஒப்பந்ததாரரின் கோரிக்கை பணப்பரிவர்த்தனைகளை அனுமதிக்க, 1 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் கோரியிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக SPRM தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றது.

Related News

KTMB பயணிகளுக்கு 30 விழுக்காடு கட்டணத் தள்ளுபடி / ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வருவதாக போக்குவரத்து அமைச்சு அறிவிப்பு

KTMB பயணிகளுக்கு 30 விழுக்காடு கட்டணத் தள்ளுபடி / ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வருவதாக போக்குவரத்து அமைச்சு அறிவிப்பு

போக்குவரத்து போலீஸ்காரரை காரால் மோதிவிட்டு தப்பியோடிய அதிகாரி கைது

போக்குவரத்து போலீஸ்காரரை காரால் மோதிவிட்டு தப்பியோடிய அதிகாரி கைது

அரசு ஊழியர்கள் கஞ்சா வளர்க்க வேண்டும் என்று கூறும் போலி புகைப்படம் - அமைச்சர் கடும் கண்டனம்

அரசு ஊழியர்கள் கஞ்சா வளர்க்க வேண்டும் என்று கூறும் போலி புகைப்படம் - அமைச்சர் கடும் கண்டனம்

ஒற்றுமை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியே எதிர்காலத்தின் அடித்தளம்: இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் புத்தாண்டு செய்தி

ஒற்றுமை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியே எதிர்காலத்தின் அடித்தளம்: இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் புத்தாண்டு செய்தி

மேற்காசிய சூழலை வைத்து அரசியல் லாபம் பார்க்கக் கூடாது - தலைவர்களுக்கு பேராக் சுல்தான் அறிவுறுத்தல்

மேற்காசிய சூழலை வைத்து அரசியல் லாபம் பார்க்கக் கூடாது - தலைவர்களுக்கு பேராக் சுல்தான் அறிவுறுத்தல்

கேஎல்ஐஏ விமான நிலையப் பகுதிகளில் 5 மில்லியனுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ விமான நிலையப் பகுதிகளில் 5 மில்லியனுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல்