Aug 9, 2026
Thisaigal NewsYouTube
முதியவர் வெட்டிக் கொலை : 6 பேரிடம் வாக்குமூலம் பதிவு
தற்போதைய செய்திகள்

முதியவர் வெட்டிக் கொலை : 6 பேரிடம் வாக்குமூலம் பதிவு

Share:

கோலாலம்பூர், மார்ச்.15-

கடந்த வியாழக்கிழமை, பூச்சோங், பண்டார் பாரு பூச்சோங்கில் உள்ள ஒரு வீட்டில் முதியவர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பில் போலீசார், இதுவரையில் அறுவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்துள்ளார்.

இந்த கோரக் கொலையைப் புரிந்த சந்தேகப் பேர்வழியை போலீசார் தேடி வரும் அதே வேளையில் கொலைக்கான பின்னணியையும் ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

70 வயது மதிக்கத்தக்க அந்த முதியவரின் உடலில் நடத்தப்பட்ட தடயவியல் சோதனையில் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் ஆழமான பல வெட்டுக் காயங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டதாக வான் அஸ்லான் தெரிவித்தார்.

அந்த முதியவர் பயன்படுத்திய கைப்பேசியும் காணப்படவில்லை. அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து மாது ஒருவர் இது குறித்து போலீசுக்கு தகவல் அளித்ததாக அவர் விளக்கினார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து