May 28, 2026
Thisaigal NewsYouTube
தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலுக்கு 20 லட்சம் ரிங்கிட் இழப்பீடா?
தற்போதைய செய்திகள்

தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலுக்கு 20 லட்சம் ரிங்கிட் இழப்பீடா?

Share:

கோலாலம்பூர், மார்ச்.26-

கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் இட மாற்றத்திற்கு கோவில் நிர்வாகத்திற்கு அரசாங்கம் 20 லட்சம் ரிங்கிட்டை இழப்பீடாக வழங்கியுள்ளதாக சர்சைக்குரிய சமயப் போதகர் பிஃர்டாவுஸ் வோங் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எனினும் பிஃர்டாவுஸ் வோங் தனது முகநூலில் முன்வைத்துள்ள குற்றஞ்சாட்டை, கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் ஸாலேஹா முஸ்தாபா வன்மையாக மறுத்துள்ளார்.

பிஃர்டாவுஸ் வோங்கின் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது என்பதுடன் அடிப்படையற்றது என்று அமைச்சர் டாக்டர் ஸாலேஹா குறிப்பிட்டுள்ளார்.

பிஃர்டாவுஸ் வோங் கூறுவதைப் போல கோவில் நிர்வாகத்திற்கு இழப்பீட்டு வடிவில் எந்தவொரு பணத் தொகையையும் கொடுப்பதற்கோ அல்லது அங்கீகரிப்பதற்கோ எந்த வாக்குறுதியையும் அரசாங்கம் வழங்கவில்லை என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் இட மாற்ற விவகாரம், சுமூகமாக தீர்க்கப்பட்டு விட்டதாக நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், இழப்பீடு தொடர்பில் எந்தவொரு உடன்பாடும் கோவில் நிர்வாகத்துடன் செய்து கொள்ளப்படவில்லை என்பதையும் அமைச்சர் டாக்டர் ஸாலேஹா இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் விளக்கினார்.

தங்களைப் பொறுத்தவரையில் இவ்விவகாரத்தில் இரு தரப்பினருமே சரிநிகரான வெற்றி வாய்ப்பு உறுதிச் செய்யப்பட்டதே தவிர இழப்பீடு தொடர்பில் எந்த விவகாரமும் பேசப்படவில்லை என்று டாக்டர் ஸாலேஹா குறிப்பிட்டார்.

Related News

பிரசரானா நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம்: அமைச்சர் அந்தோணி லோக் அதிரடி உத்தரவு

பிரசரானா நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம்: அமைச்சர் அந்தோணி லோக் அதிரடி உத்தரவு

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்