Jun 29, 2026
Thisaigal NewsYouTube
பிரதமரின் முன்னாள் செயலாளர் உட்பட இருவரின் விசாரணையில் தீவிர கவனம் செலுத்துவீர்: எஸ்பிஆர்எம் அதிகாரிகளுக்கு உத்தரவு
தற்போதைய செய்திகள்

பிரதமரின் முன்னாள் செயலாளர் உட்பட இருவரின் விசாரணையில் தீவிர கவனம் செலுத்துவீர்: எஸ்பிஆர்எம் அதிகாரிகளுக்கு உத்தரவு

Share:

புத்ராஜெயா, நவம்பர்.29-

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் முன்னாள் மூத்த அரசியல் செயலாளர் டத்தோ ஶ்ரீ ஷாம்சுல் இஸ்கண்டார் முகமட் அகின் மற்றும் வர்த்தக தரகர் ஆல்பெர்டா தே ஆகியோரின் விசாரணைகளில் தீவிர கவனம் செலுத்துமாறு தனது அதிகாரிகளுக்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மின் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி உத்தரவிட்டுள்ளார்.

சபா சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கொடுக்கப்பட்ட லஞ்சப் பணத்தை மீட்டெடுப்பதற்கு பிரதமரின் செயலாளருக்குத் தாம் லஞ்சம் கொடுத்ததாக வர்த்தகத் தரகர் ஆல்பெர்ட் தே கூறியுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் இருவரும் தற்போது எஸ்பிஆர்எம் பிடியில் உள்ளனர்.

லஞ்சம் கேட்பது, லஞ்சத்தைக் கொடுப்பது போன்ற குற்றங்களை உள்ளடக்கிய இந்த வழக்கு விசாரணை தற்போது எஸ்பிஆர்எம் சட்டம், 16 பிரிவின் கீழ் தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாக அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.

இந்த இரண்டு பிரபலங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து விசாரணையும் ஒரு வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என்று தமது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

விசாரணைகள் அனைத்தும் நியாயமாகவும், சட்டத்திற்கு உட்பட்டும் இருக்கும் என்று அஸாம் பாக்கி மீண்டும் உத்தரவாதம் அளித்துள்ளார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு