நாட்டின் பிரதமர் இல்லமான ஸ்ரீ பெர்டானாவை பழுதுபார்க்க அப்போதைய பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் 3.8 கோடி வெள்ளியை செலவழித்தது நியாமானது என்று முகைதீனின் முன்னாள் அரசியல் உதவியாளர் ஒருவர் கூறுகிறார்.
முகைதீனின் தலைமை தனிச் செயலாளர் என்ற முறையில் தாம்தான் இந்த பழுதுப்பார்க்கும் விவகாரத்தில் நேரடியாக ஈடுபட்டதாக தமது முகநூலில் மர்சிகி முகமது தெரிவித்திருந்தார்.
ஸ்ரீ பெர்டானாவில் உள்ள முக்கிய பிரச்சனையான தண்ணீர் கசிவுகள், , கூரை, சுவர்கள் மற்றும் தரை போன்றவை கடுமையாக சேதமடைந்து இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
சமையலறையைப் பயன்படுத்த முடியாது. வயரிங் பிரச்சனைகள் இருந்தன. ஒரு பிரதமரின் அதிகாரத்துவ இல்லம், மிகவும் மோசமான நிலையில் இருந்தது. முன்னாள் பிரதமர் நஜீப்பிற்கு பிறகு வேறு எந்தப் பிரதமரும் ஸ்ரீ பெர்டானாவில் தங்கவில்லை என்று மர்சிகி முகமது தெரிவித்துள்ளார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


