வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் தோல்வி அடைந்தால் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்க பெட்டிஷன் போடப்படும் என்று அந்தக் கூட்டணி அறிவித்து இருப்பது விசித்திரமாக உள்ளது என்று டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணி லோக் வர்ணித்துள்ளார்.
பெரிக்காத்தான் நேஷனலின் மூத்த தலைவர் ஒருவரிடமிருந்து வந்துள்ள இந்த வார்த்தையானது, இந்த இடைத் தேர்தலில் தாங்கள் தோல்வி அடையப் போகிறோம் என்பதை அவர் முன்கூட்டியே உணர்ந்துள்ளார் என்பது மட்டுமல்ல, மிகவும் விசித்திரமாகவும் உள்ளது என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
இந்த இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடுகள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டி எந்த கட்சி வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம்.
ஆனால், வரும் சனிக்கிழமை நடைபெறும் இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் தோல்வி அடைந்தால் அந்த தேர்தல் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பெட்டிஷன் போடப்படும் என்று அதன் மூத்தத் தலைவர் கூறியிருப்பதுதான் ஆச்சரியமாக உள்ளது என்று அந்தோணி லோக் குறிப்பிட்டுள்ளார்.








