May 22, 2026
Thisaigal NewsYouTube
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யுடன்  பிரதமர் அன்வார்  தொலைபேசி வாயிலாக நலம் விசாரிப்பு
தற்போதைய செய்திகள்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யுடன் பிரதமர் அன்வார் தொலைபேசி வாயிலாக நலம் விசாரிப்பு

Share:

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தனது நண்பர் சி. ஜோசப் விஜய்யுடன் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தொலைபேசி வழியாகத் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். தமிழ்நாடு மக்களின் நலனுக்காக விஜய் ஏற்றுள்ள இந்த மாபெரும் பொறுப்பிற்குப் பிரதமர் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

மேலும், வரும் செப்டம்பர் மாதம் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களைச் சந்திக்கவும் தான் இந்தியாவிற்கு வரவிருப்பதாகக் குறிப்பிட்ட டத்தோஸ்ரீ அன்வார், அப்போது வாய்ப்பு அமைந்தால் தமிழ்நாட்டிற்கு ஒரு சிறிய அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் சிறப்பான எதிர்காலத்திற்காகவும், மக்களின் நல்வாழ்விற்காகவும் முதலமைச்சர் விஜய் தொடர்ந்து வலிமையுடனும் அறிவார்ந்த நிலையில், திறம்பட ஆட்சி நடத்த வாழ்த்துவதாகப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related News