தனது மனைவியின் மீது ஒப்பனை மேஜை நாற்காலியை வீசி, அவரின் இடது கையை உடைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் மறுத்த 28 வயது இழுவை வாகன ஓட்டுநர் முகமது ரிஸ்மான் அக்மல் என்பவர், விசாரணை கோரியுள்ளார்.
கடந்த மே 6 அதிகாலை, மலாக்கா, கம்பங் ஸ்ரீ மாவர், பாயா ரெடான், தியாங் டுவாவில் உள்ள வீட்டில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட அவரின் 27 வயது மனைவி சவ்தா அகமட்வின் இடது கை எலும்பு முறிவடைந்தது மருத்துவமனையில் உறுதி செய்யப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய சட்டப்பிரிவின் கீழ் இந்த வழக்கு பதிவாகியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் தானாகவே முன்வந்து காவல்துறையிடம் சரணடைந்ததையும், குடும்பப் பொறுப்புகளையும் கருத்தில் கொண்டு பிணை நிபந்தனைகளுடன் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.








