சரவாக், செபுயாவ் மற்றும் மாலுடாம் பகுதிகளை இணைக்கும் மலேசியாவின் மிக நீளமான நதிப் பாலமான பாத்தாங் லூப்பார் பாலம் 1' இன்று அதிகாரப்பூர்வமாகப் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டது. இதற்கு முன்னதாக 1.7 கிலோமீட்டர் நீளம் கொண்ட ஜோகூர் நதிப் பாலமே நாட்டின் மிக நீளமான நதிப் பாலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சரவாக் துணை முதலமைச்சர் டக்ளஸ் உக்கா எம்பாஸ் இப்பாலத்தின் திறப்பு விழாவை இன்று மாலை தொடங்கி வைத்தார். சுமார் 84 கோடியே 87 லட்சம் ரிங்கிட் செலவில், 4.8 கிலோமீட்டர் நீளத்தில் இரண்டு வழிச்சாலையாக இப்பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்த புதிய பாலம் கடற்கரை வழித்தட மக்களின் பயண நேரத்தைக் குறைப்பதோடு, செபுயாவ் மற்றும் திரிசோ பகுதிகளுக்கு இடையிலான பொருளாதாரம், விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறைகளை மேம்படுத்தும் என சரவாக் பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.








