ஆசிரியர் தொழில் துறையில் பட்டதாரிகளுக்கான ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதி அளித்துள்ளார்.
அடுத்த ஆண்டுக்குள் ஆசிரியர்களின் பணியிடங்களை அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சுக்கு தாம் ஒப்புதல் அளித்துள்ளதாக இன்று, தஞ்சோங் மாலிம் உப்சி பல்கலைக்கழகத்தில் அன்வாருடன் ஒரு சந்திப்பு எனும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையில் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அடுத்த ஆண்டில் இடைநிலைப்பள்ளிகளின் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என்று அண்மையில் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் அறிவித்து இருப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.








