இரண்டு சகோதரிகள் தங்கள் கணவன்மார்களுடன் சேர்ந்து போதைப்பொருள் கடத்தியதாக தூக்குத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் இன்று ஜோகூர்பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
24 வயது சித்தி நோர்சந்ஃபினா சோத்தோர், அவரின் கணவரான 23 வயது அஃபிக் ஐடி, 32 வயது சித்தி நோர்ஃபதிமா சோட்டோர், அவரின் கணவர் 35 வயது முகமட் ரஃப்ஃபி யயா ஆகியோர் மாஜிஸ்திரேட் ஹடயா ஷுஹடா ஷம்சிசிடின் முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
இந்த நால்வரும் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் ஜோகூர்பாரு, உலு திராம், தாமான் பெஸ்தாரி என்ற இடத்தில் 27.53 கிலோ எடைகொண்ட கனாபிஸ் வகைப் போதைப்பொருளை கடத்தியதாக 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


