இரண்டு சகோதரிகள் தங்கள் கணவன்மார்களுடன் சேர்ந்து போதைப்பொருள் கடத்தியதாக தூக்குத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் இன்று ஜோகூர்பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
24 வயது சித்தி நோர்சந்ஃபினா சோத்தோர், அவரின் கணவரான 23 வயது அஃபிக் ஐடி, 32 வயது சித்தி நோர்ஃபதிமா சோட்டோர், அவரின் கணவர் 35 வயது முகமட் ரஃப்ஃபி யயா ஆகியோர் மாஜிஸ்திரேட் ஹடயா ஷுஹடா ஷம்சிசிடின் முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
இந்த நால்வரும் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் ஜோகூர்பாரு, உலு திராம், தாமான் பெஸ்தாரி என்ற இடத்தில் 27.53 கிலோ எடைகொண்ட கனாபிஸ் வகைப் போதைப்பொருளை கடத்தியதாக 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


