Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஆயர் கூனிங் சட்ட மன்ற இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்

Share:

ஈப்போ, பிப்.23-

பேரா மாநிலத்தின் 15 ஆவது சட்டமன்றத்தின் தவணைக் காலம் இன்னும் மூன்றாண்டுகளை எட்டாததால், ஆயர் கூனிங் சட்ட மன்ற இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என மாநில மந்திரி புசார் டத்தோஶ்ரீ சராணி முகமட் கூறியிருக்கிறார். தேர்தல் ஆணையம் பின்னர் கூட்டம் நடத்தினால், இடைத் தேர்தல் எப்போது நடத்தப்பட வேண்டும் என்பதை அது முடிவு செய்யும். வழக்கமாக தொகுதி காலியான 60 நாட்களுக்குள் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என சராணி தெரிவித்தார். ஆயர் கூனிங் சட்ட மன்ற தொகுதி காலியானது குறித்து எஸ்பிஆரிடம் கூடிய விரைவில் தெரியப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயர் கூனிங் மன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த இஷ்சாம் ஷாருடின் அண்மையில் மாரடைப்பு காரணமாக காலமானதை அடுத்து அத்தொகுதி காலியாகியுள்ளது. பினாங்கில் நட்புமுறை கால்பந்தாட்டத்தில் பங்கேற்றிருந்த போது அவர் திடீரென மயங்கி விழுந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு உயிரிழந்தார். அவரது நல்லுடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

Related News

மாண்டினில் வீடு எரிந்து முற்றிலும் தீக்கிரையானது – பெண் உயிரிழப்பு

மாண்டினில் வீடு எரிந்து முற்றிலும் தீக்கிரையானது – பெண் உயிரிழப்பு

அம்னோ ரூமா பாங்சா முயற்சிக்கு சிறப்பான வரவேற்பு - முன்னாள் அமைச்சர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன

அம்னோ ரூமா பாங்சா முயற்சிக்கு சிறப்பான வரவேற்பு - முன்னாள் அமைச்சர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன

சரவாக்கில் 10 ஆயிரம் லிட்டர் மானிய டீசலை முறைகேடாகப் பயன்படுத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டது

சரவாக்கில் 10 ஆயிரம் லிட்டர் மானிய டீசலை முறைகேடாகப் பயன்படுத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டது

வீட்டிற்கு 200 மீட்டருக்கு முன்னதாகவே நிகழ்ந்த கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

வீட்டிற்கு 200 மீட்டருக்கு முன்னதாகவே நிகழ்ந்த கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

சிலாங்கூர் மற்றும் சபாவில் அதிரடி சூதாட்ட வேட்டை: 67 பேர் கைது

சிலாங்கூர் மற்றும் சபாவில் அதிரடி சூதாட்ட வேட்டை: 67 பேர் கைது

மே மாதம் வரை கனமழை மற்றும் பலத்த காற்று: வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களுக்கு நிம்மதி

மே மாதம் வரை கனமழை மற்றும் பலத்த காற்று: வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களுக்கு நிம்மதி