அரசின் சிக்கன நடவடிக்கைகளை மேலும் பயனுள்ளதாக மாற்ற அனைத்து அமைச்சிலும் “தலைமை சேமிப்பு அதிகாரி” என்ற பதவியை உருவாக்க வேண்டும் என்று முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினரான சார்லஸ் சந்தியாகோ பரிந்துரைத்துள்ளார்.
அரசாங்கத்தின் செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் வெறும் பொது செலவுகளைக் குறைப்பதில் மட்டும் நின்றுவிடாமல், அரசாங்க நிதி செலவினங்களில் செயல்திறனை உயர்த்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தேவையற்ற செலவுகள், ஒரே பணிகள் மீண்டும் மீண்டும் நடைபெறுவது மற்றும் கொள்முதல் முறைகளில் ஏற்படும் கசிவுகளை கண்டறிவதில் தலைமை சேமிப்பு அதிகாரி முக்கிய பங்காற்ற முடியும் என சார்லஸ் சந்தியாகோ குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், மக்களுக்கு அத்தியாவசியமான சேவைகள் மற்றும் மானிய திட்டங்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








