Jul 4, 2026
Thisaigal NewsYouTube
நாளை சனிக்கிழமை பொது போக்குவரத்து வழக்கம் போல் செயல்பட உத்தரவு - அமைச்சர் அந்தோணி லோக்
தற்போதைய செய்திகள்

நாளை சனிக்கிழமை பொது போக்குவரத்து வழக்கம் போல் செயல்பட உத்தரவு - அமைச்சர் அந்தோணி லோக்

Share:

கோலாலம்பூர், ஜூலை.25-

மலாயன் ரயில்வே பெர்ஹாட்டான கேடிஎம்பி மற்றும் பிரசாரானா ரயில் நிலையங்கள் உட்பட அனைத்துப் பொது போக்குவரத்தும் நாளை சனிக்கிழமை வழக்கம் போல் செயல்படுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூரில் எதிர்க்கட்சியினர் பேரணி ஒன்றை நடத்துவதற்கு திட்டமிட்ட போதிலும் பொது போக்குவரத்து வழக்கம் போல் செயல்படுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்தோணி லோக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்துடன் உடன்படாதவர்கள் உட்பட பேரணியில் கலந்து கொள்கின்றவர்களின் சுதந்திர உரிமையை மடானி அரசாங்கம் பாதுகாக்கிறது என்று அந்தோணி லோக் தெரிவித்தார்.

எனினும் அன்றாடம் தங்கள் பணிகளை மேற்கொள்கின்ற பெரும்பாலான மக்களுக்கு பொது போக்குவரத்துச் சேவை தொடர்ந்து செயல்படுவது முக்கியமாகும். அவர்களுக்கு இந்தப் பேரணி ஓர் இடையூறாக இருக்கக்கூடாது என்று அந்தோணி லோக் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக துருன் அன்வார் என்ற பேரணியில் 5 லட்சம் முதல் 10 லட்சம் பேர் திரள்வார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர்.

அதே வேளையில் இந்தப் பேரணி தொடர்பில் 60 க்கும் மேற்பட்ட போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக அரச மலேசிய போலீஸ் படை தெரிவித்துள்ளது.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது