Jul 4, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு போலீஸ்காரர்களுக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

இரண்டு போலீஸ்காரர்களுக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

Share:

ஜோகூர் பாரு, ஜூலை.30-

சூதாட்ட நடவடிக்கை தொடர்புடைய குற்றச்செயலுக்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்க தனிநபர் ஒருவரிடமிருந்து 6 லட்சத்து 35 ஆயிரம் ரிங்கிட்டை லஞ்சமாகப் பெற்றதாக நம்பப்படும் இரண்டு போலீஸ்காரர்கள் 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த இரு போலீஸ்காரர்களும் இன்று ஜோகூர் பாரு நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முகமட் இஸ்ஹாம் முகமட் அலியாஸ் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைப்பதற்கான அனுமதியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இன்று பெற்றது.

40 வயது மதிக்கத்தக்க அந்த இரு போலீஸ்காரர்களும் இன்று அதிகாலை 2 மணிக்கு ஜோகூர் எஸ்பிஆர்எம் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு, வாக்குமூலம் பதிவுக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது