May 6, 2026
Thisaigal NewsYouTube
6 மாநிலங்களில் வெள்ளம்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,282 ஆக உயர்வு!
தற்போதைய செய்திகள்

6 மாநிலங்களில் வெள்ளம்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,282 ஆக உயர்வு!

Share:

கோலாலம்பூர், நவம்பர்.23-

மலேசியாவில் இன்று மாலை 6.20 மணி நிலவரப்படி, ஆறு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 282 பேராக உயர்ந்துள்ளது. சமூக நலத் துறை தகவலின்படி, மொத்தம் 2 ஆயிரத்து 955 குடும்பங்கள் 42 தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில், கிளந்தான் மாநிலம் 7 ஆயிரத்து 499 பேருடன் அதிகப்படியானப் பாதிப்பைப் பதிவு செய்துள்ளது. தும்பாட், பாச்சோக், கோத்தா பாரு, பாசீர் பூத்தே ஆகிய நான்கு மாவட்டங்களில் 31 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், கெடாவில் 236 பேர், பினாங்கு மாநிலத்தில் 115 பேர், பெர்லிஸில் 77 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சரவாக்கிலும் புதிதாக 44 பேர் நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதோடு பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் இணைந்துள்ளது.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்