நாட்டில் முக்கியப் பிரச்னையாக உருவெடுத்துள்ள அரசாங்க மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் ஒப்பந்த மருத்துவர்கள் விவகாரத்தைக் கையாளுவதற்கு உயர் நிலையிலான குழு ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்த போதிலும், நாளை திங்கட்கிழமை நாடு தழுவிய நிலையில் ஒப்பந்த மருத்துவர்கள் மறியல் நடவடிக்கையில் குதிப்பது உறுதியாகியுள்ளது.
நாளை ஏப்ரல் 3 தொடங்கி 5 ஆம் தேதி வரை, மூன்று நாட்களுக்கு நீடிக்கும் இந்த மறியல் நடவடிக்கையில் சுமார் 10,000 முதல் 13,000 வரையிலான ஒப்பந்த மருத்துவர்கள் ஈடுபடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்பந்த மருத்துவர்களின் பிரச்னையை தீர்ப்பதாக கூறி பல குழுக்கள் அமைக்கப்பட்டன. கூட்டங்களும் நடத்தப்பட்டன. ஆனால், அவை நடப்பு பிரச்னையின் தீர்வுக்கு உதவவில்லை. இது சுகாதார அமைச்சின் இயலாமையைக் காட்டுகிறது என்று மறியல் நடவடிக்கைக்கு தலைமையேற்றுள்ளவர்களில் ஒருவரான மரத்துவர் டாக்டர் ஜமால் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


