Jun 17, 2026
Thisaigal NewsYouTube
2.5 மில்லியன் ரிங்கிட் ஊழல்: அரசாங்க ஊழியர்கள் உட்பட 13 பேர் கைது
தற்போதைய செய்திகள்

2.5 மில்லியன் ரிங்கிட் ஊழல்: அரசாங்க ஊழியர்கள் உட்பட 13 பேர் கைது

Share:

சுமார் 2.5 மில்லியன் ரிங்கிட் லஞ்ச ஊழல் வழக்கில் தீபகற்ப மலேசியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஓர் அரசாங்க நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் முன்னாள் இயக்குநர் உட்பட 13 பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.

இது குறித்து எஸ்பிஆர்எம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கைது செய்யப்பட்டவர்களில் 30 முதல் 60 வயதிற்குட்பட்ட 10 ஆண்களும், 3 பெண்களும் அடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், கைது செய்யப்பட்டவர்களில் எட்டு பேர் அரசு ஊழியர்கள் என்றும், மற்ற ஐந்து பேர் நிறுவனங்களை நடத்தி வரும் பொதுமக்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க அமைப்பின் ஒப்பந்தங்களை சில முகவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த நிறுவனக் குழு ஏகபோகமாக பெறுவதற்கு அனுமதிப்பதற்காக இந்த லஞ்சத் தொகை வழங்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை எஸ்பிஆர்எம் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.

Related News

24 மணி நேரம் இடைவிடாது பறக்கும் சக்தி / தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் மலேசியாவின் புதிய அன்கா-எஸ் ஆளில்லா விமானங்கள்

24 மணி நேரம் இடைவிடாது பறக்கும் சக்தி / தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் மலேசியாவின் புதிய அன்கா-எஸ் ஆளில்லா விமானங்கள்

இராணுவ முகாம் குண்டு வெடிப்பு சம்பவம்: 7 பேரிடம் வாக்குமூலம் பதிவு

இராணுவ முகாம் குண்டு வெடிப்பு சம்பவம்: 7 பேரிடம் வாக்குமூலம் பதிவு

சிகாம்புட்டில் 1.7 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் ஆடவர் கைது

சிகாம்புட்டில் 1.7 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் ஆடவர் கைது

பாஸ் கட்சியை எதிர்த்து அனைத்து முனைகளிலும் போட்டியிடத் தயாராகிறது பெர்சாத்து

பாஸ் கட்சியை எதிர்த்து அனைத்து முனைகளிலும் போட்டியிடத் தயாராகிறது பெர்சாத்து

பிள்ளைகள் பகடிவதை செய்தது நிரூபிக்கப்பட்டால் பெற்றோர் மீதும் நடவடிக்கை - அமைச்சர் அசாலினா எச்சரிக்கை

பிள்ளைகள் பகடிவதை செய்தது நிரூபிக்கப்பட்டால் பெற்றோர் மீதும் நடவடிக்கை - அமைச்சர் அசாலினா எச்சரிக்கை

லஹாட் டத்துவில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் கூட்டுப் பாலியல் வல்லுறவு - 4 பேர் கைது

லஹாட் டத்துவில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் கூட்டுப் பாலியல் வல்லுறவு - 4 பேர் கைது