Feb 25, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளிக்கிழமை புத்ராஜெயாவில் அஸாம் பாக்கிக்கு எதிராகப் போராட்டம்
தற்போதைய செய்திகள்

வெள்ளிக்கிழமை புத்ராஜெயாவில் அஸாம் பாக்கிக்கு எதிராகப் போராட்டம்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.25-

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி பதவி விலகக் கோரி, வரும் வெள்ளிக்கிழமை புத்ராஜெயாவில் உள்ள அந்த ஆணையத்தின் தலைமையகத்திற்கு முன்னால் மற்றொரு போராட்டம் நடைபெறவுள்ளது.

காலை 10 மணிக்குத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள், தங்கள் "ஒற்றுமை மற்றும் எதிர்ப்பை" வெளிப்படுத்தும் விதமாக கருப்பு நிற உடை அணியுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

நாட்டின் முதன்மையான அமலாக்கத்துறை ஆணையமான எஸ்பிஆர்எம், ஊழலை ஒழிப்பதற்குப் பதிலாக, முறையான வணிக உரிமையாளர்களை மிரட்டவும், வலுக்கட்டாயமாக நிறுவனங்களைக் கைப்பற்றவும் ஓர் அழுத்தக் கருவியாகப் பயன்படுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது என்று இந்த பேரணி ஏற்பாட்டுக் குழுவின் பிரதிநிதியாக லீ வாய் ஹோங் தெரிவித்துள்ளார்.

Related News

வெள்ளிக்கிழமை புத்ராஜெயாவில் அஸாம் பாக்கிக்கு எதிராகப் போ... | Thisaigal News