Aug 2, 2026
Thisaigal NewsYouTube
போலீசார் விசாரணை செய்யத் தொடங்கினர்
தற்போதைய செய்திகள்

போலீசார் விசாரணை செய்யத் தொடங்கினர்

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 08-

LRT, கிளானா ஜெயா வழித்தடத்தில் ஆடவர் ஒருவர், ரயில் இருப்புப்பாதைக்குள் அத்துமீறி நுழைந்து, ரயில் சேவைக்கு பாதிப்பை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணை செய்து வருவதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சுலிஸ்மி அஃபெண்டி சுலைமான் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் போலீசார், புகார் ஒன்றைப் பெற்றுள்ளனர்.. குற்றவியல் சட்டம் 447 பிரிவின் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நேற்று திங்கட்கிழமை, யாரும் எதிர்பாராத வண்ணம் அந்த ஆடவர், இருப்புப்பாதைக்குள் நுழைந்ததன் காரணமாக கோலாலம்பூர் மஸ்ஜித் ஜமேக் - கிற்கும், Bangsar- க்கும் இடையிலான LRT ரயில் சேவை நிலைக்குத்தியது என்று ஏசிபி சுலிஸ்மி தெரிவித்தார்.

எனினும் அத்துமீறி நுழைந்த அந்த ஆடவர் யார் என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு