Mar 11, 2026
Thisaigal NewsYouTube
அந்த வாகனத்தின் உரிமையாளரை போலீஸ் தேடுகிறது
தற்போதைய செய்திகள்

அந்த வாகனத்தின் உரிமையாளரை போலீஸ் தேடுகிறது

Share:

கார் ஒன்று, சாலையில் யு வளைவில், திரும்பும் போது காரின் கதவு திடீரென்று திறந்த நிலையில் அதிலிருந்து சிறார் ஒருவர் கீழே விழுந்த சம்பவம் தொடர்பில் அந்த காரின் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர் என்று கிளந்தான் மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை, மாலை 5.42 மணியளவில் கோத்தாபாரு, ஜாலான் சுல்தான் யாயா பெத்ரா சாலையில் நடந்த இச்சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக வளைத் தளத்தில் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

காரிலிருந்து கீழே விழுந்த அந்த சிறார், வாகனங்கள் மத்தியில் எழுந்து நடக்க முற்படும் போது, எதிர்பாராத விதமாக அந்த U வளைவில் திரும்பிய மற்றொரு வாகனம் ஒன்றினால் மோதப்பட்டு தூக்கி எறியப்படுகிறார்.

கீழே விழுந்த நிலையில் அந்த சிறார் மீண்டும் எழுந்து நடக்கும் போது இதர வாகனமோட்டிகளால் காப்பாற்றப்படுகிறார்.

காரின் கதவை சரியாக பூட்டாமல் கவனக்குறைவாக செயல்பட்ட அந்த வாகனமோட்டியிடம் விசாரணை நடத்துவதற்கு அவரை போலீசார் தேடி வருவதாக கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் ஷாக்கி ஹருன் தெரிவித்துள்ளார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு