Mar 14, 2026
Thisaigal NewsYouTube
“மலேசியாவின் முடிவு தெளிவான செய்தியாகும்”
தற்போதைய செய்திகள்

“மலேசியாவின் முடிவு தெளிவான செய்தியாகும்”

Share:

இஸ்ரேலுக்க சொந்தமான கப்பல் ஒன்று மலேசிய துறைமுகத்தில் அணைவதற்கு அரசாங்கம் அனுமதி மறுத்து இருப்பது மூலம் இஸ்ரேலுக்கு எதிராக மலேசியா கொண்டுள்ள நிலைப்பாட்டை மிகத் தெளிவாக காட்டியுள்ளது என்று தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

இஸ்ரேல் கப்பலுக்கு எதிராக மலேசியாவின் முடிவு மற்றும் நிலைப்பாடு எந்த வகையிலும் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு இல்லை என்பதையும்
ஃபஹ்மி ஃபட்சில் விளக்கினார்.

இஸ்ரேலிய கப்பல் ஒன்று மலேசிய துறைமுகத்தில் அணைவதற்கு திட்டமிட்டு இருந்த நிலையில் போக்குவரத்து அமைச்சின் மூலமாக புத்ராஜெயா எடுத்த அதிரடி முடிவினால் அக்கப்பல் மலேசிய கடற்பகுதிக்குள் நுழைவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Related News