Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சிறப்பு மக்களவைக் கூட்டம் கூட்டப்பட வேண்டும்: பாஸ் கோரிக்கை
தற்போதைய செய்திகள்

சிறப்பு மக்களவைக் கூட்டம் கூட்டப்பட வேண்டும்: பாஸ் கோரிக்கை

Share:

ஷா ஆலாம், அக்டோபர்.03-

வரும் திங்கட்கிழமை நாடாளுமன்ற மக்களவைக் கூட்டம் தொடங்கப்படவிருக்கும் வேளையில் இஸ்ரேல் இராணுவத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 23 மலேசியர்கள் தொடர்பாக விவாதிப்பதற்கு சிறப்பு மக்களவைக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்று பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்த 23 மலேசியர்களை மீட்பதற்கு அரசாங்கம் எடுக்கக்கூடிய முடிவானது, மலேசிய மக்களைப் பிரதிநிதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மூலமாக அமைய வேண்டும் என்று எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற கொறடாவான தக்கியுடின் ஹசான் குறிப்பிட்டார். யூத இராணுவத்தின் இந்த தன்மூப்பான நடவடிக்கை, அனைத்துலக சட்டங்களை மீறியச் செயலாகும். இது ஜெனிவா மாநாட்டு ஒப்பந்தத்திற்கு முரணானதாகும்.

அனைத்துலக மாநாட்டு ஒப்பந்தத்தினால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உலகளாவிய மனிதநேய முயற்சிக்கு இது ஓர் இழுக்காகும். எனவே இந்த விவகாரம் உடனடியாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று தக்கியுடின் ஹசான் கேட்டுக் கொண்டார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்