Aug 1, 2026
Thisaigal NewsYouTube
"இடையூறு செய்ததால் தான் ராக்கி உயிரிழந்தது" - போலீசாரிடம் விசாரணையை ஒப்படைத்தது MBDK
தற்போதைய செய்திகள்

"இடையூறு செய்ததால் தான் ராக்கி உயிரிழந்தது" - போலீசாரிடம் விசாரணையை ஒப்படைத்தது MBDK

Share:

ஷா ஆலாம், ஆகஸ்ட்.01-

Port Klang, Taman Teluk Gedung Indah பகுதியில் தெருநாய்களைப் பிடிக்கும் நடவடிக்கையின் போது வளர்ப்பு நாய் ராக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையை கிள்ளான் மாநகர் மன்றமான MBDK போலீசாரிடம் ஒப்படைத்துள்ளது.

குடியிருப்பாளர்களின் புகாரைத் தொடர்ந்து நடத்தப்பட்ட நடவடிக்கையில், ராக்கியைப் பிடிக்க முயன்ற போது சிலர் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு செய்ததாக MBDK தெரிவித்துள்ளது.

சம்பவத்தின் போது, நாயைப் பிடிக்க பயன்படுத்திய 'Loop' கருவியை பெண் ஒருவர் கத்தியால் வெட்ட முயன்றதுடன், நாயை விடுவிக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் கருவியைப் பாதுகாப்பாக அகற்ற முடியாமல் ராக்கி உயிரிழந்ததாக MBDK விளக்கமளித்துள்ளது.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சமூக ஊடகங்களில் வைரலான காணொளியானது அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்களின் கடுமையான கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

#JusticeForRocky என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வரும் நிலையில், கிள்ளான் செலாத்தான் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News