May 15, 2026
Thisaigal NewsYouTube
தர்மா மடானி திட்டத்திற்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் அங்கீகாரம்
தற்போதைய செய்திகள்

தர்மா மடானி திட்டத்திற்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் அங்கீகாரம்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.16-

இந்தியர் உருமாற்றுத் திட்டமான மித்ராவின் கீழ் நாடு முழுவதும் உள்ள ஆயிரம் ஆலயங்களுக்கு தலா 20 ஆயிரம் ரிங்கிட் நிதி உதவி வழங்கும் தர்மா மடானி திட்டத்திற்குப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அங்கீகாரம் வழங்கியுள்ளார் என்று மித்ராவிற்கு மீண்டும் தலைமையேற்றுள்ள தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன் தெரிவித்தார்.

ஆலயங்களுக்கு 20 ஆயிரம் ரிங்கிட் நிதி உதவித் திட்டமானது, அதில் 10 விழுக்காட்டுத் தொகை மட்டுமே ஆலயங்களில் செயலாக்கத்திற்குப் பயன்படுத்தலாம். எஞ்சிய 90 விழுக்காட்டுத் தொகை சமூகம் சார்ந்த ஆலய நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் விளக்கினார்.

வழங்கப்படும் 20 ஆயிரம் ரிங்கிட் உதவித் தொகைக்கான செலவினம் தொடர்புடைய அறிக்கைகளை மித்ராவிற்கு ஆலய நிர்வாகங்கள் திருப்பி அனுப்ப வேண்டும். இதுதான் ஆலயங்களுக்கு விதிக்கப்படும் நிபந்தனையாகும். இந்த உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் வரும் வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்குத் தொடங்கி, வரும் நவம்பர் மாதம் வரை திறக்கப்பட்டு இருக்கும் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் விளக்கினார்.

Related News

மலேசிய இளைஞர் மன்றத்திற்கு 5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு / தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டத்தில் அன்வார் அறிவிப்பு

மலேசிய இளைஞர் மன்றத்திற்கு 5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு / தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டத்தில் அன்வார் அறிவிப்பு

பள்ளி கேண்டினில் எலிக் கழிவுகள்:  ஒப்பந்ததாரருக்கு சம்மன் - தூய்மைப் பணிகள் தீவிரம்

பள்ளி கேண்டினில் எலிக் கழிவுகள்: ஒப்பந்ததாரருக்கு சம்மன் - தூய்மைப் பணிகள் தீவிரம்

பேங்க் நெகாராவில் தீவிபத்து - ஜெனரேட்டர் அறை சேதமடைந்தது

பேங்க் நெகாராவில் தீவிபத்து - ஜெனரேட்டர் அறை சேதமடைந்தது

அசாம் பாக்கி தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் – கோபிந்த் சிங் டியோ

அசாம் பாக்கி தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் – கோபிந்த் சிங் டியோ

மாணவர்கள் மோதல் சம்பவம்: இன்ஸ்ட்கிராம் பதிவே மோதலுக்கான காரணம் என கெடா போலீஸ் தகவல்

மாணவர்கள் மோதல் சம்பவம்: இன்ஸ்ட்கிராம் பதிவே மோதலுக்கான காரணம் என கெடா போலீஸ் தகவல்

கெப்போங் உணவகத்தில் முறைத்துப் பார்த்தவரைக் கடுமையாக தாக்கிய மூவர் மீது குற்றச்சாட்டு

கெப்போங் உணவகத்தில் முறைத்துப் பார்த்தவரைக் கடுமையாக தாக்கிய மூவர் மீது குற்றச்சாட்டு