Apr 2, 2026
Thisaigal NewsYouTube
பெட்ரோல் ரோன் 95 சலுகைத் திட்டத்தில் 90 விழுக்காடு மக்கள் பாதிக்கப்படமாட்டார்கள் - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் உத்தரவாதம்
தற்போதைய செய்திகள்

பெட்ரோல் ரோன் 95 சலுகைத் திட்டத்தில் 90 விழுக்காடு மக்கள் பாதிக்கப்படமாட்டார்கள் - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் உத்தரவாதம்

Share:

ஷா ஆலாம், மார்ச்.28-

வரும் ஜுன் மாதம் அமலுக்கு வரவிருக்கும் இலக்கிடலப்பட்ட ரோன் 95 பெட்ரோல் மானியத் திட்டத்தில் 90 விழுக்காடு மக்களுக்கு எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மீண்டும் உத்தரவாதம் அளித்துள்ளார்.

ரோன் 95 பெட்ரோலுக்கு தற்போது வழங்கி வரும் சலுகைத் திட்டம் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என்று பிரதமர் உறுதி தெரிவித்தார்.

ஜுன் மாதம் அமல்படுத்தப்படவிருக்கும் ரோன் 95 பெட்ரோல் இலக்கிலடப்பட்ட திட்டத்தில், சாமானிய மக்கள் பெரியளவில் பாதிக்கப்படுவார்கள் என்று தற்போது அவதூறும், தவறான பிரச்சாரங்களும் கட்டவிழ்க்கப்பட்டு வரும் நிலையில் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டிய கடப்பாடு தமக்கு இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

இது போன்ற அவதூறான தகவல்களை மக்கள் எளிதில் நம்பி விட வேண்டாம் என்று அன்வார் கேட்டுக் கொண்டார். உதாரணத்திற்கு அரசாங்கம் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியது. அதில் சாமானிய மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று உத்தரவாதம் அளித்தது. அது போலவே ரோன் 95 பெட்ரோல் இலக்கிலிடப்பட்ட மானியத் திட்டத்திலும் சாமானிய மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று பிரதமர் விளக்கினார்.

எனினும் இந்த இலக்கிடப்பட்ட மானியத் திட்டத்தில் அந்நிய நாட்டவர்களுக்கும், மிகப் பெரிய பணக்காரர்களுக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

Related News

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

சிலாங்கூரில் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்பான சிறப்புக் கூட்டம்

சிலாங்கூரில் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்பான சிறப்புக் கூட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த போலி தகவல்: ஐவருக்கு எதிராக எம்.சி.எம்.சி விசாரணை

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த போலி தகவல்: ஐவருக்கு எதிராக எம்.சி.எம்.சி விசாரணை

கிழக்கு இந்தோனேசியாவில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ஒருவர் பலி

கிழக்கு இந்தோனேசியாவில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ஒருவர் பலி

ஏப்ரல் 15 முதல் அரசு மற்றும் GLC ஊழியர்களுக்கு 'வீட்டிலிருந்தே பணி' - பிரதமர் அன்வார் இப்ராஹிம்  அறிவிப்பு

ஏப்ரல் 15 முதல் அரசு மற்றும் GLC ஊழியர்களுக்கு 'வீட்டிலிருந்தே பணி' - பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்