தெலுக் இந்தான், ஜூலை 15-
தங்கள் வசம் 40 தேங்காய்களை வைத்திருந்தது தொடர்பில் விளக்கம் அளிக்கத் தவறியதற்காக இரண்டு நபர்களுக்கு தெலுக் இந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 14 நாட்கள் சிறைத் தண்டனை விதித்தது.
மாஜிஸ்திரேட் T. அஷ்வினி முன்னிலையில் நிறுத்தப்பட்ட 50 வயது V. சுப்பிரமணி மற்றும் 34 வயது முகமது அமீர் ரஷீத் மஸ்ரி ஆகிய இருவரும் தங்களுக்கு எதிரான தண்டனையை ஒப்புக்கொண்டனர்.
கடந்த ஜுலை 12 ஆம் தேதி இரவு 8 மணியளவில் பேராக்,பாகன் டத்தோ, ஹுடாங் மெலிந்தாங் - கில் திருடியதாக நம்பப்படும் அந்த 40 தேங்காய்களுடன் பிடிபட்ட அந்த இருவரும் அந்த தேங்காய்கள் எப்படி கிடைத்தன என்பது குறித்து விளக்கம் அளிக்கத் தவறிவிட்டனர் என்று குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.








