Mar 10, 2026
Thisaigal NewsYouTube
சுல்தான் கெடா அறக்கட்டளைத் திட்டம் தொடக்கம்: மக்கள் நலனுக்காகப் புதிய முயற்சி
தற்போதைய செய்திகள்

சுல்தான் கெடா அறக்கட்டளைத் திட்டம் தொடக்கம்: மக்கள் நலனுக்காகப் புதிய முயற்சி

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.08-

கெடா மாநில மக்களின் நலனை மேம்படுத்துவதற்காக 'சுல்தான் கெடா அறக்கட்டளை' எனும் புதிய நிதித் திட்டத்தை சுல்தான் சாலேஹுடின் சுல்தான் பாட்லிஷா இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். கல்வி, சமூக நலம், சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விலங்கு பாதுகாப்பு, விளையாட்டு ஆகிய ஆறு முக்கியத் துறைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அறக்கட்டளை செயல்படும் என அதன் தலைவரான கெடா இளவரசர் தெங்கு சராஃபுடின் பாட்லிஷா சுல்தான் சலேஹுடின் தெரிவித்தார்.

2025-ஆம் ஆண்டின் இறுதி வரை இந்த நிதியத்தின் மூலம் சுமார் 2.04 மில்லியன் ரிங்கிட் நிதி உதவி மாநிலம் முழுவதிலும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளைக்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு 2025, 2026-ஆம் ஆண்டுகளுக்கான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களும் நிறுவனங்களும் தாராளமாகப் பங்களிக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வெளிப்படையான நிர்வாகத்தின் மூலம் தகுதியுள்ள நபர்களுக்குச் சரியான முறையில் நிதி சென்றடைவதை உறுதிச் செய்வதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும் என தெங்கு சராஃபுடின் மேலும் தெரிவித்தார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு