Feb 8, 2026
Thisaigal NewsYouTube
சுல்தான் கெடா அறக்கட்டளைத் திட்டம் தொடக்கம்: மக்கள் நலனுக்காகப் புதிய முயற்சி
தற்போதைய செய்திகள்

சுல்தான் கெடா அறக்கட்டளைத் திட்டம் தொடக்கம்: மக்கள் நலனுக்காகப் புதிய முயற்சி

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.08-

கெடா மாநில மக்களின் நலனை மேம்படுத்துவதற்காக 'சுல்தான் கெடா அறக்கட்டளை' எனும் புதிய நிதித் திட்டத்தை சுல்தான் சாலேஹுடின் சுல்தான் பாட்லிஷா இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். கல்வி, சமூக நலம், சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விலங்கு பாதுகாப்பு, விளையாட்டு ஆகிய ஆறு முக்கியத் துறைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அறக்கட்டளை செயல்படும் என அதன் தலைவரான கெடா இளவரசர் தெங்கு சராஃபுடின் பாட்லிஷா சுல்தான் சலேஹுடின் தெரிவித்தார்.

2025-ஆம் ஆண்டின் இறுதி வரை இந்த நிதியத்தின் மூலம் சுமார் 2.04 மில்லியன் ரிங்கிட் நிதி உதவி மாநிலம் முழுவதிலும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளைக்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு 2025, 2026-ஆம் ஆண்டுகளுக்கான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களும் நிறுவனங்களும் தாராளமாகப் பங்களிக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வெளிப்படையான நிர்வாகத்தின் மூலம் தகுதியுள்ள நபர்களுக்குச் சரியான முறையில் நிதி சென்றடைவதை உறுதிச் செய்வதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும் என தெங்கு சராஃபுடின் மேலும் தெரிவித்தார்.

Related News

அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களை முறைப்படுத்தும் திட்டத்திற்கு தமது அமைச்சு ஆதரவு – ங்கா கோர் மிங் திட்டவட்டம்

அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களை முறைப்படுத்தும் திட்டத்திற்கு தமது அமைச்சு ஆதரவு – ங்கா கோர் மிங் திட்டவட்டம்

கைது செய்யப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி: அம்னோ இளைஞர் பிரிவு அறிவிப்பு

கைது செய்யப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி: அம்னோ இளைஞர் பிரிவு அறிவிப்பு

திடீரென திறக்கப்பட்ட கார் கதவு: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கை முறிந்தது

திடீரென திறக்கப்பட்ட கார் கதவு: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கை முறிந்தது

பண்டிகைக் கால உதவித் தொகை: ஆன்லைன் மோசடி கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

பண்டிகைக் கால உதவித் தொகை: ஆன்லைன் மோசடி கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

பெட்டாலிங் ஜெயா சீ பார்க் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து

பெட்டாலிங் ஜெயா சீ பார்க் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து

செயற்கை நுண்ணறிவு செயலிகளுக்கு உரிமம் வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலனை

செயற்கை நுண்ணறிவு செயலிகளுக்கு உரிமம் வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலனை