கோல்ப் விளையாட்டு உதவியாளராக ஒரு கோல்ப் கிளப்பில் பணியாற்றி வரும் 21 வயது பெண்ணை மானப்பங்கம் செய்ததாக இரண்டு இராணுவ உயர் அதிகாரிகளுக்கு எதிராக போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது.
நெகிரி செம்பிலானில் உள்ள ஓர் இராணுவ முகாமை சேர்ந்த அந்த உயர் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக 21 வயது பெண் பாலியல் புகார் அளித்து இருப்பதாக மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ சைனோல் சமா தெரிவித்தார்.
அலோர் காஜாவில் உள்ள ஒரு கோல்ப் திடலில் நடந்ததாக கூறப்படும் இச்சம்பவம் தொடர்பில் 51 மற்றும் 51 வயதுடைய இரு இராணுவ அதிகாரிகள் புலன் விசாரணைக்கு உதவும் வகையில் அழைக்கப்பட்டுள்ளதாக சைனோல் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் குற்றவியல் சட்டம் 354 ஆவது பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. குற்றச்சாட்டை மறுத்து அந்த இரு இராணுவ அதிகாரிகளும் தங்களை தற்காக்கும் வண்ணம் மாற்று போலீஸ் புகார்களை செய்து இருப்பதாக சைனோல் சாமா தெரிவித்தார்.








