Dec 2, 2025
Thisaigal NewsYouTube
ரமலான் சந்தைகளில் விலைகளை உயர்த்துவதா?
தற்போதைய செய்திகள்

ரமலான் சந்தைகளில் விலைகளை உயர்த்துவதா?

Share:

நோன்பு மாதம் இன்று தொடங்கியுள்ள வேளையில் ரமலான் சந்தைகளில் பொருட்களின் விலைகளை உயர்த்துவது கண்டு பிடிக்கப்பட்டா​ல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்நாட்டு வாணிபம், வாழ்க்​கைச் செலவின அமைச்சர் Salahuddin Ayub நினைவுறுத்தியுள்ளார்.


நாடு முழுவதும் ரமலான் சந்தைகள் மற்றும் பேரங்காடி மையங்கள் ஆகியவற்றி​ல் பொருட்களின் விலை உயர்த்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு அமலாக்க அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபடுவர் என்று அவர் குறிப்பிட்டார். தமது அமைச்சுடன், விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளும் களத்தி​​ல் இறங்கி சோதனை நடத்துவர் என்று Salahuddin Ayub குறிப்பிட்டார்.

Related News