Mar 13, 2026
Thisaigal NewsYouTube
ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!
தற்போதைய செய்திகள்

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

Share:

புத்ராஜெயா, ஜனவரி.18-

மலேசியக் கடல் பகுதியில் சட்டத்திற்குப் புறம்பாக மீன்பிடித்த அந்நிய நாட்டு மீனவர்களைக் கட்டுப்படுத்த 2019 முதல் மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் நாகா நடவடிக்கையில், இதுவரை 5,329 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆறு ஆண்டுகளில் மொத்தம் 628 அந்நிய நாட்டு மீன்பிடிப் படகுகள் பிடிப்பட்டதோடு, அவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் 203.44 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பிடிப்பட்ட படகுகளில் 469 படகுகளுடன் வியட்நாம் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து இந்தோனேசியா, தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளின் படகுகளும் மலேசிய அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. நாட்டின் கடல் எல்லைப் பாதுகாப்பை உறுதிச் செய்யவும், உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என மலேசிய கடலோர காவல்படைத் தலைமை இயக்குநர் டத்தோ முஹமட் ரோஸ்லி அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Related News

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு