Jan 18, 2026
Thisaigal NewsYouTube
ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!
தற்போதைய செய்திகள்

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

Share:

புத்ராஜெயா, ஜனவரி.18-

மலேசியக் கடல் பகுதியில் சட்டத்திற்குப் புறம்பாக மீன்பிடித்த அந்நிய நாட்டு மீனவர்களைக் கட்டுப்படுத்த 2019 முதல் மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் நாகா நடவடிக்கையில், இதுவரை 5,329 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆறு ஆண்டுகளில் மொத்தம் 628 அந்நிய நாட்டு மீன்பிடிப் படகுகள் பிடிப்பட்டதோடு, அவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் 203.44 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பிடிப்பட்ட படகுகளில் 469 படகுகளுடன் வியட்நாம் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து இந்தோனேசியா, தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளின் படகுகளும் மலேசிய அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. நாட்டின் கடல் எல்லைப் பாதுகாப்பை உறுதிச் செய்யவும், உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என மலேசிய கடலோர காவல்படைத் தலைமை இயக்குநர் டத்தோ முஹமட் ரோஸ்லி அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!

நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதம் அவசியம்: அரசு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பிரதமர் அன்வார் அறிவுரை!

நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதம் அவசியம்: அரசு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பிரதமர் அன்வார் அறிவுரை!