Mar 13, 2026
Thisaigal NewsYouTube
கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!
தற்போதைய செய்திகள்

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

Share:

கூலிம், ஜனவரி.18-

கெடா, கூலிம் ஹைடேக் அருகே உள்ள ஜாலான் சுங்கை கோப்பில் இன்று மாலை நடைபெற்ற இரு கார்கள் மோதிய பயங்கர விபத்தில், ஒரு காரில் பயணம் செய்த இரு சிறுவர்களும் அதன் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான புரோட்டோன் S70 வகை கார் தீப்பிடித்து எரிந்த நிலையில், அதிலிருந்த ஓட்டுநர் காயங்களுடன் உயிர் தப்பிய வேளையில், மற்றொறு காரான பெரோடுவா விவாவிற்குள் சிக்கிக் கொண்ட மூவரையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டதாக கூலிம் ஹைடேக் தீயணைப்பு நிலையத் தலைவர் அஸ்மீர் ஹசான் தெரிவித்தார்.

பெரோடுவா விவாவில் இருந்த இரு சிறுவர்களைப் பொதுமக்கள் உதவியுடன் மீட்ட போதும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதை மருத்துவக் குழுவினர் உறுதிச் செய்ததோடு, காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஓட்டுநர் சிறப்பு உபகரணங்கள் மூலம் வெளியே எடுக்கப்பட்டார். தீப்பிடித்த காரை தன்னார்வத் தீயணைப்புப் படையினர் முழுமையாக அணைத்த நிலையில், காயமடைந்த மற்றொரு காரின் ஓட்டுநர் சிகிச்சைக்காகக் கூலிம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Related News

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு