பத்து காஜா, ஜாலான் பூசிங் சமிக்ஞை விளக்குப் பகுதியில், ஆணிகளை இரைத்தவாறு காரில் சென்ற நபரைப் பேராக் மாநில போலீசார் கைதுசெய்துள்ளனர்.
45 வயதுடைய அந்த நபர், மன நிலை பாதிப்புக்கு ஆளாகி இருக்கலாம் என்று நம்பப்படுவதாக பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முஹம்மாட் யுஸ்ரி ஹசான் பஸ்ரி தெரிவித்தார்.
தவிர, அந்த நபர், பழுதடைந்த வாகனங்களை இழுத்துச் செல்லும் இழுவை லோரி பணியாளர் அல்ல என்பதும் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சாலையில் ஆணிகளை இரைத்தவாறு சென்ற அந்த நபரின் அராஜக செயல் தொடர்பான காணொளி ஒன்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, அந்நபர் கடந்த ஏப்ரல் முதல் தேதி அதிகாலை மூன்று மணியளவில் lahat டில் உள்ள changkat larang என்ற இடத்தில் கைது செய்யப்பட்டதாக முஹம்மாட் யுஸ்ரி தெரிவித்தார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


