பத்து காஜா, ஜாலான் பூசிங் சமிக்ஞை விளக்குப் பகுதியில், ஆணிகளை இரைத்தவாறு காரில் சென்ற நபரைப் பேராக் மாநில போலீசார் கைதுசெய்துள்ளனர்.
45 வயதுடைய அந்த நபர், மன நிலை பாதிப்புக்கு ஆளாகி இருக்கலாம் என்று நம்பப்படுவதாக பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முஹம்மாட் யுஸ்ரி ஹசான் பஸ்ரி தெரிவித்தார்.
தவிர, அந்த நபர், பழுதடைந்த வாகனங்களை இழுத்துச் செல்லும் இழுவை லோரி பணியாளர் அல்ல என்பதும் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சாலையில் ஆணிகளை இரைத்தவாறு சென்ற அந்த நபரின் அராஜக செயல் தொடர்பான காணொளி ஒன்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, அந்நபர் கடந்த ஏப்ரல் முதல் தேதி அதிகாலை மூன்று மணியளவில் lahat டில் உள்ள changkat larang என்ற இடத்தில் கைது செய்யப்பட்டதாக முஹம்மாட் யுஸ்ரி தெரிவித்தார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


