May 18, 2026
Thisaigal NewsYouTube
வர்த்தகப் பெண்மணி பமேலா தொடர்ந்து தேடப்பட்டு வருகிறார்
தற்போதைய செய்திகள்

வர்த்தகப் பெண்மணி பமேலா தொடர்ந்து தேடப்பட்டு வருகிறார்

Share:

கோலாலம்பூர், ஜூலை.02-

கடந்த ஏப்ரல் மாதம் புத்ராஜெயா எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்குச் செல்வதாக கூறி வெளியே சென்ற ஒரு வர்த்தகப் பெண்மணியான டத்தின் பமேலா லிம் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் தொடர்பில் அவரைத் தேடும் பணியைப் போலீசார் தொடர்ந்து முடுக்கி விட்டுள்ளனர் என்று கோலாலம்பூர் போலீஸ் துணைத் தலைவர் துணை கமிஷனர் டத்தோ முகமட் உசோஃப் தெரிவித்தார்.

அந்த வர்த்தகப் பெண்மணி காணாமல் போன தினத்திலிருந்து போலீசாரும் தீவிர புலன் விசாரணை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

பமேலா காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகப் பேர்வழி ஒருவனின் முகத் தோற்றம் வரையப்பட்டது. எனினும் அது வெறும் 40 விழுக்காடு மட்டுமே பொருந்துகிறது என்று டத்தோ முகமட் உசோஃப் தெரிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்பில் போலீசார் இதுவரையில் 48 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்து இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி