பாச்சோக் பகுதியில் மாற்றுத் திறனாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கணவன் மனைவி இருவரையும் போலீசார் நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர்.
படாங் லாத்தி, லாடாங் மெர்டேகா செர்பு பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த இந்த கொலை வழக்கில், விசாரணைக்கு உதவுவதற்காக 26 வயதுடைய கணவர் மே 22-ஆம் தேதி வரையில், ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதேவேளையில், அவரது 27 வயது மனைவி, வரும் மே 20-ஆம் தேதி வரையில் ஐந்து நாட்கள் காவலில் வைக்க கோத்தா பாரு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்ற நீதிபதி பக்ருல் ராசி அப்துல் ஹமீத் உத்தரவிட்டுள்ளார்.
குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








