Mar 27, 2026
Thisaigal NewsYouTube
கெங் பாலா கொள்கைக்கும்பல் முறியடிக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

கெங் பாலா கொள்கைக்கும்பல் முறியடிக்கப்பட்டது

Share:

ஜொகூர் , செப்டம்பர் 02-

வீடு புகுந்து திருடுதல், வழிப்பறி கொள்ளை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த கெங் பாலா கொள்கைக்கும்பல் முறியடிக்கப்பட்டது என்ற கொள்ளைக்கும்பலை ஜோகூர் போலீசார் முறியடித்துள்ளனர்.

அந்த கும்பலின் தலைவன் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டது மூலம் அக்கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் குமார் முத்துவேலு தெரிவித்தார்.

பிடிபட்ட 11 பேரில் ஒன்பது பேர் ஆண்கள் என்றும் இருவர் பெண்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி தொடங்கி, 26 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 20 க்கும் 65 க்கும் இடைப்பட்ட வயதுடைய 11 பேரும் வளைத்துப்பிடிக்கப்பட்டதாக இன்று ஜோகூர் போலீஸ் தலைமையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் இதனை குறிப்பிட்டார்..

Related News