இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஜோகூர் பாரு, உலு திராம் போலீஸ் நிலையத் தாக்குதல் நடத்தியவரின் தந்தை மற்றும் அவரின் மூத்த சகோதரருக்கு பயங்கரவாத சித்தாந்தத்தைப் பரப்பியதற்காகவும், ஆதரவு அளித்ததற்காகவும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட 64 வயது தந்தை ராடின் இம்ரானுக்கு பயங்கரவாத ஆதரவு மற்றும் துப்பாக்கி வைத்திருந்ததற்காகவும், 36 வயது சகோதரர் ராடின் ரோமியுல்லாவிற்கு பயங்கரவாத ஆதரவிற்காகவும் இந்த தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், இது குறித்த தகவல்களை மறைத்ததற்காகத் தாக்குதல் நடத்தியவரின் தாயார் 61 வயது ரோஸ்னா ஜந்தானுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நீதிபதி நுருல்ஹுதா நுர் ஐனி முகமது நோர், நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்தத் தீர்ப்பை வழங்கியதாகத் தெரிவித்தார்.








