May 1, 2026
Thisaigal NewsYouTube
இடையூறு விளைவித்ததாக முதியவர் குற்றஞ்சாட்டப்பட்டார்
தற்போதைய செய்திகள்

இடையூறு விளைவித்ததாக முதியவர் குற்றஞ்சாட்டப்பட்டார்

Share:

தமது வீட்டில் நாய்களைp பிடிக்க வந்த பெட்டாலிங் ஜெயா அமலாக்கப் பணியாளர்களின் பணிக்கு இடையூறு விளைவித்ததுடன், அந்த பணியாளர்கள் தம்மை தாக்கி சித்ரவதைச் செய்ததாக நாடகம் ஆடிய முதியவர் ஒருவர் இன்று பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் ​நீதிமன்றத்தில் குற்ற​ஞ்சாட்டப்பட்டார்.

69 வயதான பேட்ரிக் கோ என்ற அந்த முதியவர், அமலாக்கப் பணியாளர்கள் தம்மை தாக்கி விட்டதைப் போல் பொது மக்கள் மத்தியில் கவன ஈர்ப்பு செய்த போதிலும், மாநகர் மன்ற ஊழியர்களின் பணிக்கு அவர் இடையூறு விளைவித்ததாக குற்றச்சாட்டி​ல் தெரிவிக்கப்பட்டது.

அந்த முதியவர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி இரவு 9 மணியளவில் பெட்டாலிங் ​ஜெயா, தாமான் கனகாபுரத்தில் உள்ள தமது வீட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்ப்பட்டது. குற்றவாளி என்று நி​ரூபிக்கப்பட்டால் 2 ஆண்டு சிறை அல்லது கூடிய பட்சம் 10 ஆயிரம் வெள்ளி விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் ​கீழ் அந்த முதியவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி