Mar 10, 2026
Thisaigal NewsYouTube
இடையூறு விளைவித்ததாக முதியவர் குற்றஞ்சாட்டப்பட்டார்
தற்போதைய செய்திகள்

இடையூறு விளைவித்ததாக முதியவர் குற்றஞ்சாட்டப்பட்டார்

Share:

தமது வீட்டில் நாய்களைp பிடிக்க வந்த பெட்டாலிங் ஜெயா அமலாக்கப் பணியாளர்களின் பணிக்கு இடையூறு விளைவித்ததுடன், அந்த பணியாளர்கள் தம்மை தாக்கி சித்ரவதைச் செய்ததாக நாடகம் ஆடிய முதியவர் ஒருவர் இன்று பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் ​நீதிமன்றத்தில் குற்ற​ஞ்சாட்டப்பட்டார்.

69 வயதான பேட்ரிக் கோ என்ற அந்த முதியவர், அமலாக்கப் பணியாளர்கள் தம்மை தாக்கி விட்டதைப் போல் பொது மக்கள் மத்தியில் கவன ஈர்ப்பு செய்த போதிலும், மாநகர் மன்ற ஊழியர்களின் பணிக்கு அவர் இடையூறு விளைவித்ததாக குற்றச்சாட்டி​ல் தெரிவிக்கப்பட்டது.

அந்த முதியவர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி இரவு 9 மணியளவில் பெட்டாலிங் ​ஜெயா, தாமான் கனகாபுரத்தில் உள்ள தமது வீட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்ப்பட்டது. குற்றவாளி என்று நி​ரூபிக்கப்பட்டால் 2 ஆண்டு சிறை அல்லது கூடிய பட்சம் 10 ஆயிரம் வெள்ளி விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் ​கீழ் அந்த முதியவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து