கடந்த புதன் கிழமை அன்று தமன்சரா டமாய், ஐடியல் அபார்ட்மெண்ட் அருகே உள்ள ஒரு சிற்றோடைக்கு அருகில் ஆட்டிசம் குழந்தையான ஜெய்ன் ரய்யான் இறந்து கிடந்தது. அந்தச் சிறுவன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இது குறித்து தகவல் அளித்த சிலாங்கூர் மாநில காவல் துறை தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவிக்கயில், சுங்கை பூலோ மருத்துவமனையில் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த அறிக்கையின்படி, அந்தச் சிறுவனின் உடலில் காயங்கள் இருந்ததாகத் தெரிவித்தார்.
அந்தக் காயத்தில் குற்றச் செயல் காரணமாக இருக்கலாம் எம நம்பப்படுகிறது. இதன் தொடர்பில் சிலரை விசாரிக்க வேண்டி இருப்பதாகவும் அவர் சொன்னார்.








