பேராக், தைப்பிங், தாமான் கோத்தா வீரா கமுன்டிங்கில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், கைவிடப்பட்ட நிலையில் புதிதாக பிரசவிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படும் சிசு ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை காலை 10 மணியளவில் அந்த சிசு கண்டுப்பிடிக்கப்பட்டதாக, சம்பவத்தை நேரில் பார்த்த மாது ஒருவர் தெரிவித்தார். சாக்லெட் நிற துணியினால் சுற்றப்பட்டு, ஒரு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த அந்தக் குழந்தையின் மீது எறும்புகள் மொய்துக்கொண்டிருந்ததாக தைப்பிங் மாவட்ட போலீஸ் தலைவர் ரஸ்லா அப்துல் ஹமிட் குறிப்பிட்டார்.
இது குறித்து புகார் பெற்றுள்ள போலீசார், விசாரணை செய்ய தொடங்கியுள்ளதாகவும், அந்த சிசு தைப்பிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் ரஸ்லா அப்துல் ஹமிட் தெரிவித்தார்.

Related News

நாளை முதல் ரோன்97 மற்றும் மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை உயர்வு

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்


