பேராக், தைப்பிங், தாமான் கோத்தா வீரா கமுன்டிங்கில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், கைவிடப்பட்ட நிலையில் புதிதாக பிரசவிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படும் சிசு ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை காலை 10 மணியளவில் அந்த சிசு கண்டுப்பிடிக்கப்பட்டதாக, சம்பவத்தை நேரில் பார்த்த மாது ஒருவர் தெரிவித்தார். சாக்லெட் நிற துணியினால் சுற்றப்பட்டு, ஒரு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த அந்தக் குழந்தையின் மீது எறும்புகள் மொய்துக்கொண்டிருந்ததாக தைப்பிங் மாவட்ட போலீஸ் தலைவர் ரஸ்லா அப்துல் ஹமிட் குறிப்பிட்டார்.
இது குறித்து புகார் பெற்றுள்ள போலீசார், விசாரணை செய்ய தொடங்கியுள்ளதாகவும், அந்த சிசு தைப்பிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் ரஸ்லா அப்துல் ஹமிட் தெரிவித்தார்.

Related News

பொது உயர்கல்விக்கழகங்களில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உடனடி இலவசக் கல்வி: பிரதமர் அன்வார் அறிவிப்பு

அடுத்த ஆண்டு முதல் படிவம் 6 மற்றும் மெட்ரிகுலேஷன் உயர்க்கல்வி அமைச்சின் கீழ் மாற்றம்: பிரதமர் அறிவிப்பு

2027 ஆம் ஆண்டு முதல், 6 வயதிலேயே முதலாம் ஆண்டு கல்வி: பிரதமர் அன்வார் இப்ராஹிம் அதிரடி அறிவிப்பு

ஒரே செயலியில் 38 அரசு சேவைகள்: 10 லட்சம் பதிவிறக்கங்களைக் கடந்து MyGOV மலேசியா சாதனை

பத்துமலை தைப்பூசம் 2026: பக்தர்களுக்கு நற்செய்தி! 2 நாட்களுக்கு கேடிஎம் ரயில் பயணம் முற்றிலும் இலவசம் - போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவிப்பு


