கோலாலன்பூர், ஜூலை 4-
நாட்டில் SYABU வகை போதைப்பொருள், Pisang Goreng பலகாரத்தைப் போன்று மிக எளிதாக கிடைப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கினபாத்தாங் எம்.பி. டத்தோஸ்ரீ புங் மொக்தார் ராடின் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இவ்வகை போதைப்பொருள், மிக குறைந்த விலையில் மிக எளிதாக கிடைப்பதாக புங் மொக்தார் குறிப்பிட்டார்.
இது போன்ற சூழலின் காரணமாகவே நாட்டில் போதைப்பொருள் துடைத்தொழிக்கப்படுவது மிக சிரமமாக உள்ளது. எனவே 1983 ஆம் ஆண்டு போதைப்பித்தர்கள் மறுவாழ்வு சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று அந்த சபா எம்.பி. அரசாங்கத்தை கேட்டுக்கொண்டார்.
போதைப்பொருள் Pisang Goreng பலகாரத்தைப் போன்று மிக எளிதாகவும் வெறும் 30 வெள்ளி செலவிலும் கிடைக்குமானால் வருகின்ற இளைய தலைமுறையினருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும் என்று புங் மொக்தார் எச்சரித்துள்ளார்.
Syabu போதைப்பொருள் எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது? எப்படி கிடைக்கிறது?
தேசிய போதைப்பொருள் துடைத்தொழிப்பு ஏஜென்சியும், போலீசாரும் எங்கே, என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று புங் மொக்தார் கேள்வி எழுப்பினார்.








