பெட்டாலிங் ஜெயா, ஜூலை 05-
ரொன் 95 வகைப் பெட்ரோலுக்கான உதவித்தொகை சீரமைப்பை, அரசாங்கம் அமல்படுத்துவது குறித்து, அடுத்தாண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் மட்டுமே தெரியவரும்.
மாறாக, சில தரப்பினர் முன்வைத்துள்ள ஆருடம் அல்லது கணிப்பை போன்று, அந்த எரிபொருளுக்கான சீரமைப்பு உடனடியாக அமல்படுத்தப்படாது என கோலாலம்பூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொருளாதார ஆய்வாளர் இணைப்பேராசிரியர் டாக்டர் அய்மி ஸுல்ஹாஸ்மி தெரிவித்தார்.
நடப்பில் டீசலுக்கான விலை லிட்டருக்கு 3 வெள்ளி 35 காசாக உள்ள நிலையில், பயனீட்டாளர்களுக்கான விளைவுகளைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் பெட்ரோலுக்கான உதவித்தொகை சீரமைப்பை கவனத்துடன் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
பணவீக்க விகிதம், ரிங்கிட்டின் மதிப்பு பலவீனமாக உள்ளது முதலான காரணிகளை சீர்த்தூக்கி பார்க்க வேண்டியுள்ளதால், பெட்ரோலுக்கான உதவித்தொகை சீரமைப்பு நடவடிக்கையை, அரசாங்கம் அடுத்தாண்டு மேற்கொள்வதே ஏற்புடையதாக இருக்கும் என தாம் கருதுவதாகவும் அய்மி கூறினார்.








