Jul 2, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் கொடுமை மீதான சட்டப்பூர்வ கொள்கையில் அரசு பின்வாங்காது
தற்போதைய செய்திகள்

பாலியல் கொடுமை மீதான சட்டப்பூர்வ கொள்கையில் அரசு பின்வாங்காது

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.22-

பாலியல் வன்கொடுமை மீதான சட்டப்பூர்வ கொள்கையில் அரசாங்கம் இதுவரை தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கவில்லை என்று சட்டச் சீர்த்திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் கொண்டுள்ள சட்டப்பூர்வ கொள்கை தொடர்புடைய சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற பரிந்துரைகள் அல்லது விமர்சனங்கள் இருந்த போதிலும் அரசாங்கம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இது 18 வயதுக்குட்பட்டவர்களின் பாதுகாப்பை முன்னுரிமையாகக் கொண்ட அனைத்துலகச் சட்டத் தரங்களுக்கு ஏற்ப உள்ளது என்று அவர் சுட்டிக் காட்டினார்.

கிளந்தான் மாநிலத்தில் 18 வயதுக்கு உட்பட்ட பதின்ம வயதுடையவர்கள் சம்பந்தப்பட்ட பாலியல் புகார்களில் 90 விழுக்காடு இருவரின் சம்மதத்தின் பேரில் நடைபெற்றுள்ளது.

இதில் ஆண் நபரைச் சட்டத்தின் முன் நிறுத்தும் அதே வேளையில் இதற்கு உடந்தையாக இருந்த பெண்ணையும் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடப்பு குற்றவியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யூசோஃப் மாமாட் முன்வைத்த யோசனை தொடர்பில் கருத்துகையில் அஸாலினா மேற்கண்டவாறு கூறினார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்