அந்நியத் தொழிலாளர்களை தருவிப்பது தொடர்பில் மனித வள அமைச்சர் வி. சிவகுமாரின் சிறப்பு அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் புகார் தொடர்பான விசாரணை அறிக்கை தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் மின் தலைமை ஆணையர் தான் ஶ்ரீ அசாம் பாகின் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதும் மேல் நடவடிக்கைக்காக சட்டத்துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.
லஞ்ச ஊழல் தொடர்பில் எந்தவொரு நபரின் விசாரணை அறிக்கையிலும் தாங்கள் வேண்டுமென்றே இழுத்தடிக்கும் போக்கை கடைப்பிடித்ததில்லை என்று அவர் விளக்கினார்.
லஞ்ச ஊழல் தொடர்பில் எஸ்பிஆர்எம் மின் விசாரணைக்கு ஆளாகியுள்ள தமது 5 சிறப்பு அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதை கடந்த மே மாதம் மனித வள அமைச்சர் சிவகுமார் உறுதிபடுத்தினார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


