அந்நியத் தொழிலாளர்களை தருவிப்பது தொடர்பில் மனித வள அமைச்சர் வி. சிவகுமாரின் சிறப்பு அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் புகார் தொடர்பான விசாரணை அறிக்கை தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் மின் தலைமை ஆணையர் தான் ஶ்ரீ அசாம் பாகின் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதும் மேல் நடவடிக்கைக்காக சட்டத்துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.
லஞ்ச ஊழல் தொடர்பில் எந்தவொரு நபரின் விசாரணை அறிக்கையிலும் தாங்கள் வேண்டுமென்றே இழுத்தடிக்கும் போக்கை கடைப்பிடித்ததில்லை என்று அவர் விளக்கினார்.
லஞ்ச ஊழல் தொடர்பில் எஸ்பிஆர்எம் மின் விசாரணைக்கு ஆளாகியுள்ள தமது 5 சிறப்பு அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதை கடந்த மே மாதம் மனித வள அமைச்சர் சிவகுமார் உறுதிபடுத்தினார்.

Related News

எம்எச்370 தேடும் பணி: 7,236.40 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவை எட்டியது; புதிய கண்டுபிடிப்புகள் இல்லை

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி


