Jun 17, 2026
Thisaigal NewsYouTube
டேசா பெட்டாலிங் உணவகத்தில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய நபர்: போலீசார் விசாரணை
தற்போதைய செய்திகள்

டேசா பெட்டாலிங் உணவகத்தில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய நபர்: போலீசார் விசாரணை

Share:

கோலாலம்பூர், டேசா பெட்டாலிங்கில் உள்ள உணவகம் ஒன்றில் கடந்த ஜூன் 9 அன்று காலை 11:05 மணியளவில், ஆடவர் ஒருவர் துப்பாக்கி போன்ற ஒரு பொருளைக் காட்டி மிரட்டிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

31 வயதுடைய அந்தச் சந்தேக நபர், புகார்தாரரைத் தாக்கியதோடு அந்தப் பொருளைக் காட்டி மிரட்டலும் விடுத்துள்ளதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ரோஸ்டி டாவுட் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு காயம் விளைவித்தல் குற்றவியல் மிரட்டல் மற்றும் அனுமதியின்றி ஆயுதம் வைத்திருத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது அவர் குறிப்பிட்டார்.

மற்றொரு சம்பவத்தில், புக்கிட் ஜாலில் பகுதியில் உள்ள வீடமைப்பு நிர்வாகம் மீது ஏற்பட்ட அதிருப்தியால், அங்கிருந்த பாதுகாப்புச் சாவடியின் பூம் கேட் மற்றும் சிசிடிவி கேமராவைச் சேதப்படுத்திய முன்னாள் வாடகைதாரர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் இரண்டு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறார் என்று ரோஸ்டி டாவுட் மேலும் கூறினார்.

Related News

தேர்தல் பிரச்சாரத்தில் ஜசெக-வை  எதிரியாக சித்தரிக்க வேண்டாம்: அமானா கட்சி வலியுறுத்தல்

தேர்தல் பிரச்சாரத்தில் ஜசெக-வை எதிரியாக சித்தரிக்க வேண்டாம்: அமானா கட்சி வலியுறுத்தல்

அவசரப்பட்டு பேச வேண்டாம், நிதானமாக இருங்கள்" - பெர்சத்து கட்சிக்கு அன்வர் மூசா அறிவுறுத்தல்

அவசரப்பட்டு பேச வேண்டாம், நிதானமாக இருங்கள்" - பெர்சத்து கட்சிக்கு அன்வர் மூசா அறிவுறுத்தல்

ஜோகூரில் பணிப்பெண் சித்திரவதை வழக்கு: மேலும் இருவர் புகார் அளித்ததால் 2 தம்பதிகள் மீண்டும் கைது!

ஜோகூரில் பணிப்பெண் சித்திரவதை வழக்கு: மேலும் இருவர் புகார் அளித்ததால் 2 தம்பதிகள் மீண்டும் கைது!

டானாவ் கோத்தா ஏரியில் மீன்கள் மடிந்ததற்குக் தொடர் மழையே காரணம்

டானாவ் கோத்தா ஏரியில் மீன்கள் மடிந்ததற்குக் தொடர் மழையே காரணம்

மலாக்காவில் ஹோட்டல் மின்தூக்கி 7 ஆவது மாடியிலிரந்து கீழே விழுந்து விபத்து: 2 பராமரிப்பு ஊழியர்கள் படுகாயம்

மலாக்காவில் ஹோட்டல் மின்தூக்கி 7 ஆவது மாடியிலிரந்து கீழே விழுந்து விபத்து: 2 பராமரிப்பு ஊழியர்கள் படுகாயம்

பொதுப் பல்கலைக்கழகங்களில் 30,000 மாணவர்கள் 'பின்வாசல்' வழியாக நுழைந்தார்களா

பொதுப் பல்கலைக்கழகங்களில் 30,000 மாணவர்கள் 'பின்வாசல்' வழியாக நுழைந்தார்களா