கோலாலம்பூர், டேசா பெட்டாலிங்கில் உள்ள உணவகம் ஒன்றில் கடந்த ஜூன் 9 அன்று காலை 11:05 மணியளவில், ஆடவர் ஒருவர் துப்பாக்கி போன்ற ஒரு பொருளைக் காட்டி மிரட்டிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
31 வயதுடைய அந்தச் சந்தேக நபர், புகார்தாரரைத் தாக்கியதோடு அந்தப் பொருளைக் காட்டி மிரட்டலும் விடுத்துள்ளதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ரோஸ்டி டாவுட் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு காயம் விளைவித்தல் குற்றவியல் மிரட்டல் மற்றும் அனுமதியின்றி ஆயுதம் வைத்திருத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது அவர் குறிப்பிட்டார்.
மற்றொரு சம்பவத்தில், புக்கிட் ஜாலில் பகுதியில் உள்ள வீடமைப்பு நிர்வாகம் மீது ஏற்பட்ட அதிருப்தியால், அங்கிருந்த பாதுகாப்புச் சாவடியின் பூம் கேட் மற்றும் சிசிடிவி கேமராவைச் சேதப்படுத்திய முன்னாள் வாடகைதாரர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் இரண்டு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறார் என்று ரோஸ்டி டாவுட் மேலும் கூறினார்.








