Jun 17, 2026
Thisaigal NewsYouTube
டானாவ் கோத்தா ஏரியில் மீன்கள் மடிந்ததற்குக் தொடர் மழையே காரணம்
தற்போதைய செய்திகள்

டானாவ் கோத்தா ஏரியில் மீன்கள் மடிந்ததற்குக் தொடர் மழையே காரணம்

Share:

கோலாலம்பூர், ஸ்தாபாக், தாமான் டானாவ் கோத்தா ஏரி பூங்காவில் அண்மையில் பெருமளவிலான மீன்கள் மடிந்து மிதந்ததற்குக் தொடர் கனமழையே காரணமாக இருக்கலாம் என கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல் விளக்கம் அளித்துள்ளது.

கனமழை காரணமாக ஏரி நீரில் கரைந்திருக்கும் ஆக்ஸிஜன் அளவு குறைந்ததோடு, வடிகால்களில் இருந்து குப்பைகளும், அசுத்தங்களும் ஏரிக்குள் கலந்ததே இதற்கு காரணம் என ஆரம்பக்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஏரி ஒரு பொழுதுபோக்குத் தலம் மட்டுமல்லாமல், வெள்ளத் தடுப்புக் குளமாகவும் செயல்படுவதால், நகரின் பிற குளங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாக டிபிகேஎல் குறிப்பிட்டுள்ளது.

ஏரியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகப் பொதுமக்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து, மடிந்த மீன்கள் உடனடியாக அகற்றப்பட்டு, ஏரிக்குள் குப்பைகள் நுழைவதைத் தடுக்கப் பாதுகாப்பு வலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சுற்றுச்சூழல் துறையினர் ஏரி நீரின் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்து வருகின்றனர் என்று டிபிகேஎல் விளக்கம் அளித்துள்ளது.

Related News

தேர்தல் பிரச்சாரத்தில் ஜசெக-வை  எதிரியாக சித்தரிக்க வேண்டாம்: அமானா கட்சி வலியுறுத்தல்

தேர்தல் பிரச்சாரத்தில் ஜசெக-வை எதிரியாக சித்தரிக்க வேண்டாம்: அமானா கட்சி வலியுறுத்தல்

அவசரப்பட்டு பேச வேண்டாம், நிதானமாக இருங்கள்" - பெர்சத்து கட்சிக்கு அன்வர் மூசா அறிவுறுத்தல்

அவசரப்பட்டு பேச வேண்டாம், நிதானமாக இருங்கள்" - பெர்சத்து கட்சிக்கு அன்வர் மூசா அறிவுறுத்தல்

ஜோகூரில் பணிப்பெண் சித்திரவதை வழக்கு: மேலும் இருவர் புகார் அளித்ததால் 2 தம்பதிகள் மீண்டும் கைது!

ஜோகூரில் பணிப்பெண் சித்திரவதை வழக்கு: மேலும் இருவர் புகார் அளித்ததால் 2 தம்பதிகள் மீண்டும் கைது!

டேசா பெட்டாலிங் உணவகத்தில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய நபர்: போலீசார் விசாரணை

டேசா பெட்டாலிங் உணவகத்தில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய நபர்: போலீசார் விசாரணை

மலாக்காவில் ஹோட்டல் மின்தூக்கி 7 ஆவது மாடியிலிரந்து கீழே விழுந்து விபத்து: 2 பராமரிப்பு ஊழியர்கள் படுகாயம்

மலாக்காவில் ஹோட்டல் மின்தூக்கி 7 ஆவது மாடியிலிரந்து கீழே விழுந்து விபத்து: 2 பராமரிப்பு ஊழியர்கள் படுகாயம்

பொதுப் பல்கலைக்கழகங்களில் 30,000 மாணவர்கள் 'பின்வாசல்' வழியாக நுழைந்தார்களா

பொதுப் பல்கலைக்கழகங்களில் 30,000 மாணவர்கள் 'பின்வாசல்' வழியாக நுழைந்தார்களா