ஜோகூர் மாநிலத் தேர்தல் பிரச்சாரங்களின்போது ஜசெகவை கட்சியை எதிரியாகச் சித்தரிக்க வேண்டாம் என அமானா கட்சியின் தேசியத் உதவித் தலைவர் மாஹ்பூஸ் ஒமார் அரசியல் தலைவர்களுக்கு நினைவூட்டியுள்ளார்.
மாநில வளர்ச்சி மற்றும் திட்டங்களுக்காக ஜசெக-வுடன் ஒத்துழைப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லாதபோது, தேர்தல் சமயத்தில் மட்டும் வாக்கு வங்கிக்காக அவர்களை அச்சுறுத்தலாகக் காட்டுவது தலைவர்களின் மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் என்று அவர் விமர்சித்துள்ளார். இத்தகைய 'இரட்டை முக' அரசியல் தற்போதைய சூழலுக்குப் பொருந்தாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜோகூர் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் தனித்துப் போட்டியிடும் என்றும், ஜசெக-வுடன் இணைந்து ஆட்சி அமைக்கத் தயாராக இல்லை என்றும் ஜோகூர் மந்திரி பெசார் Onn Hafiz Ghazi கூறியிருந்தார். அதற்குப் பதிலடி கொடுத்த போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், கூட்டரசு அரசாங்கத்தில் ஜசெக-வும் அம்னோவும் இணைந்து செயல்படுவதை நினைவூட்டிய நிலையில், மாஹ்பூஸ் ஒமாரின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.








