இன்று காலையில் கோலாலம்பூரிலிருந்து தாய்லாந்து தலைநகர் பேங்காக்கிற்கு புறப்பட்ட மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான ஏர்பஸ் A330-200 விமானம், பாதி வழியிலேயே திரும்பி, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அவசரமாக தரையிங்கியது.
MH 780 என்ற அந்த விமானம், ஏன் பாதி வழியிலேயே திரும்பி, அவசரமாக தரையிங்கியது என்பதற்கான காரணம் விளக்கப்படவில்லை. எனினும் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறங்கியப்பின்னர் மற்றொரு விமானம் மூலம் பேங்காக்கிற்கு அனுப்பப்பட்டனர்.
அந்த ஏர்பஸ் விமானம் காலை 11 மணிக்கு பேங்காக் Suvarnabhumi அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு அட்டவணையிடப்பட்டு இருந்தது.








